Friday, August 29, 2014

அந்த நீலச்சிறுகுருவி

நல்வழியில் ஒரு பாடல் வரி: "நெட்டிருப்புப் பாரைக்கு நெக்குவிடாப் பாறை,
பசுமரத்தின் வேருக்கு நெக்குவிடும்". பாறையில் ஈரம் மிகமிகக் குறைவு.
ஈரமே இல்லை என்று சொல்லப்பட்டாலும் மிகக்குறைந்த அளவிலான ஈரம் அதனுள்
உண்டு. ஜீரோ வாட் பல்ப் மிகக்குறைவான மின்சாரம் இழுப்பது போல. அந்த
ஈரத்தையே பசுமரத்தின் விதை எடுத்துக்கொள்கிறது. பாறையை உடைத்து
வளர்கிறது.

//மண்கனக்கும் கரும்பாறை மடிப்புகளைப் பிளந்தமைக்கும் கண்விழியா
சிறுவிதைக்குள் வாழும் முளைக்கரு//

அதையேதான் செய்யவிருக்கிறது இல்லையா?
தன்னை வென்று தான்கடந்த, அறத்தாலும் கட்டுண்ணப்படாத கம்சரைக் காலில்விழச் செய்யும் இளநீலம்! ஒளிவிடும் இளநீலம் ஓவியத்தில் கழுகின்மேல்அமர்ந்திருப்பது கற்பனையை எங்கோ கொண்டு செல்கிறது. அற்புதமான பகுதி!

அன்புடன்,
த.திருமூலநாதன்.

அன்புள்ள திருமூலநாதன்

ஒரு சிறு நீலக்குருவியால் தூக்கிச்செல்லப்படுமளவு எடைகொண்டதே இவ்வுலகம்.

ஜெ