Thursday, October 30, 2014

பிரயாகை 11 -கடிதம்

 
 
 
பிரயாகை 11, இது தான் உங்களின் தர்க்கம். சகல திசைகளிலும் நின்று அவரவர் பார்வையில் உள்ள உண்மை சொல்லி, இறுதியில் எல்லாவற்றிற்கும் மேலான ஒரு உண்மை அல்லது நெறி சொல்லி செல்வது அத்வைதி ஜெயமோகன் சுவாமிகளின் விசேடம். வேண்டியதற்கு வேண்டிய நியாயம் வேறு. நெறி நியாயம் வேறு. வளைத்து  மதிக்க முடியாத வழுவா நெறி. ஆடினாலும் நிற்பது தருமனின் ஊசி முனை.

வழக்கம் போல் ஒரு உச்சக்கட்ட உணர்ச்சி வெள்ளம் வடிந்து சென்றபின் நெகிழ்ந்த ஓடையாய் இந்த பகுதி. அநேகமாய் தருமன் மத்திம வயது நோக்கி செல்வது போல் தெரிகிறது. 


--> சற்று அதிசயமாக உள்ளது. காசர்கோட்டில் தனிமையில் உறக்கமின்றி திரிந்து படித்து பேயனாய் உக்கிரன் போல்  உணர்ச்சி பிரவாகம் இருந்த மனதில் எப்படி இந்த மெல்லிய கூர் அம்பு சீராக செல்வது போல் rational mind 


--> அறிமுக விழா அழைப்பிதழ் கண்டேன். "உலகின் மிக பெரிய நாவல் வரிசை"  நம்பிக்கைக்கு வாழ்த்துகள். அற்புத கனவு மலர்ந்து முடியும் வரை காத்து நிற்கட்டும் அந்த விவரிக்க முடியா அழகில் உறங்கும் உங்களின் விஷ்ணு 

மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்.  

அன்புடன்,
லிங்கராஜ்