Monday, October 13, 2014

இளநாகன்




[பெரிதாக்க படத்தின்மேல் சொடுக்கவும்]


அன்புள்ள ஜெ,

வண்ணக்கடலில் வரும் இளநாகன் கதைக்கு எவ்விதம் தேவைப்படுகிறான் என்று எனக்கு பெருங்குழப்பமிருந்ததுநீங்களே ஒரு கேள்வி பதிலின் போதுவண்ணக்கடல் முக்கிய கதைமாந்தர்களின் இளமையைப் பற்றி சொல்வதுஎனவே ஒரு தொகுத்துக் கூறும் வசதிக்காக அக்கதைகளை வேறு ஒருவர் கேட்பது போல அமைத்திருக்கிறேன் என்றிருந்தீர்கள்து சரி தான்அப்படி ஒரு பாத்திரம் இல்லையென்றால் பீமன்துரியோதனன்அர்ஜுனன்துரோணர்கர்ணன்ஏகலவ்யன் கதைகளைத் தொகுத்து ஒரே மூச்சில் சொல்லியிருக்க முடியாது.

ஆனால் இளநாகன் அவ்வளவுக்கு மட்டும் தானாஅப்படி ஒருவன் தேவையென்றால் முதற்கனலின் ஆஸ்திகன் போல ஏதேனுமொரு பிற்கால கதாபாத்திரத்திற்கு அதன் தாய் கூறும் தையாகவே அதை வைத்திருக்கலாமேன் பாரதத்திற்கே சம்பந்தமில்லாத ஒருவனைஅதுவும் ஓர் தமிழ் பாணனை வைத்து துவக்க வேண்டும்இருவிதமாக இதற்கு பதில் தேறலாம்.

ஒன்று அந்த இளநாகன் நீங்கள் தான்உங்களின் பாரத தரிசனங்களைத் தொடர்ந்தவர்களுக்கு இது இன்னும் தெளிவாகத் துலங்கும்வண்ணக்கடலின் நிலக்காட்சிகள்நகர் வர்ணனைகள் தங்களின் அருகர்களின் ாதை முதலான பயணக் கட்டுரைகளில் வந்தவற்றின் விரிவாக்கம் தான்குறிப்பாக அந்த மஹுவா கள்ளைக் ுடித்து விட்டு மயங்கிக் கிடக்கும் ஓர் இளைஞனை இரு பெண்கள் தெளிவாக்க முயலும் காட்சிஇது நீங்கள் ஏற்கனவே எழுதியது தான்ழிந்த இருபத்தைந்து வருடங்களாக தங்களின் பயணத்தில் பாரதமும் இடம்பெற்றிருக்கிறதுகுமரியில் ுவங்கி வேறு வேறு வழிகளினூடாக ீங்கள் கண்டடைந்த அஸ்தினபுரயைத் தான் எழுதியிருக்கிறீர்கள்இளநாகன் கீரனிடம் பேசிக்கொண்டிருக்கும் போதுகீரன் 'ஏதேது அப்படியே அஸ்தினபுரி வரை சென்று விடுவீர்கள் போலஎன்று சொல்லும் சொல் தான் அவனக்கு அஸ்தினபுரி ெல்ல தூண்டல்உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளின் சொல் தான் வெண்முரசு எழுதத் தூண்டுதல் என்றிருந்தீர்கள்.

இரண்டாவது அந்த இளநாகன் வாசிக்கும் நாங்களும் தான்ஒவ்வொருவாசகரும் தான்இளநாகன்  ஓர் வடநாட்டு சூதனிடம் கேட்கிறான், 'அஸ்தினபுரிக்கு எப்படி போவதுஅது நெருங்குவதை எப்படி கண்டுபிடிப்பது?'. அதற்கு அச்சூதன் சொல்கிறான்,'வழிசூதர் பாடல்கள ான்அஸ்தினபுரி நெருங்க நெருங் சூதர் பாடல்களில் உண்மை கூடிக் கொண்டே வரும்'. அதற்கேற்றார் போல அஸ்தினபுரியைப் பற்றி நல்ல விஷயங்களே மதுரையிலும்புகாரிலும் சொல்லப்படுகின்றனஅஸ்தினபுரி நெருங்க நெருங்க நாவல் புறக்கணிக்கப் பட்டவர்களின் கதையா மாறுகிறது.மற்றொரு விதத்தில் உண்மை கூடுகிறது. இதுவும் இயல்பானது தான். இந்தியாவில் ஐரோப்பாவின் மேன்மைகள் மட்டுமே கேட்டிருக்கிறேன். இங்கே வந்த பிறகு தான் உண்மையை அறிகிறேன்.

மேலும் அஸ்தினாபும் என்பதே ஓர் பெரிய குறியீடு தான்இங்கே அஸ்தினபுரி என்பது மகாபாரதத்தைத் ான் குறிக்கிறதுபாரதத்தைப் பற்றி படிக்கும் தோறும்கேட்கும் தோறும் நமக்கு பாரதம் துலங்கி வரத்துவங்கும்வெண்முரசிற்கு ுன்னர் இருந்ததை விட தற்போது என்னுடைய புரிதல் அதிகமாயிருக்கிறதுஆனால் நான் பாரதத்தை முற்றாக அறிந்து கொள்வேனாநிச்சயம் எனக்குத் தெரிந்த வழிகளிலெல்லாம் அதை அறிந்து கொள்வேன்ஒவ்வொரு வாசகரும் அவ்வாறேஜெவும் அவ்வாறேஅதைத் தான் வண்ணக்கடலின் கடைசி அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது.

'சூதரேமாகதரேஏழ்பனைநாட்டு ருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன இளநாகன் சென்ற அஸ்தினபுரி எதுஅதை பிறர் சென்றடையமுடியாதுஒவ்வொருவரும் அவரவருக்குரிய அஸ்தினபுரியையே சென்றடைகின்றனர்ெல்லும் வழியில் சிறகுதிர்ந்து விழுபவரும் அதிலேயே உதிர்கின்றனர்செல்லாது கருவறையிலேயே தங்கிவிட்டவர்களும் அதையே உணர்கின்றனர்.'

மகாபாரதம் என்பது என்னவெறும் கதையாஅது ஐந்தாம் வேதம்நம் புண்ணிய பூமியின் தத்துவங்கள் னைத்தும் முயங்கிய ஓர் வெளிமற்றொரு விதத்தில் ஒட்டுமொத்த பாரதமும் பங்கேற்ற ஓர் நிகழ்வு தான் பாரதப் போர்அப்படியென்றால் அஸ்தினபுரியின் நிகழ்வுகள் பாரதத்தின் ஒவ்வோர் பகுதியிலும் த்தகைய விளைவுகளை ஏற்படுத்தின ன்பதும் மிக முக்கியம்அவற்றைப் பற்றி பிற்கால நாவல்கள் பேசும் பொழுது இந்த நிலக்காட்சிகள் மேலும் முக்கியம் பெறலாம்.

என்னை இளநாகன் என உணர்ந்த கணம் வண்ணக்கடல் மொத்தமாத் திறந்தது. அங்கங்கு தனித்து நின்றவையனைத்துமே ஓர் ஒழுக்குக்குள் வந்தது. இப்போது யோசித்துப் பார்த்தால் இளநாகன் ஓர் இன்றியமையா பாத்திரமே.

அன்புடன்,
அருணாச்சலம்நெதர்லாந்து


அன்புள்ள அருணாச்சலம்

எழுத ஆரம்பிக்கும்போது உண்மையில் திட்டம் ஏதும் இருக்காது. அல்லது நம் மேல்மனதுக்குத் திட்டங்கள் இருக்காது. ஆழ்மனது ஏதோ திட்டமிட்டிருக்கும்.

இளநாகன் மகாபாரதத்தின் தொன்மங்களும் தத்துவங்களும் விளைந்த நிலவியலைப்பற்றி ஆராயும் ஒருவன். தொன்மங்கள் பெருகிச்செல்லும் வெளியில் அவை முளைத்த மண்ணை முதலில் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஆகவே அவன் வருகிறான் என நானே கண்டுகொண்டேன்

மேலும் இங்கே வராவிட்டால் இனி போர் முடிந்தபின்னர்தான் பாரதம் வர முடியும். பாரதக்கதையும் பாரதநிலமும் ஒன்றே என்பது என் தரிசனம். நான் நடந்து அறிந்த தரிசனம். அது நாவலில் வந்தாகவேண்டுமல்லவா

ஜெ

நகரங்கள்

பாரத தரிசனம்