Wednesday, October 29, 2014

ஒரே இலக்கு கொண்டவன்



ஜெ

இன்றைய பிரயாகையில் அர்ஜுனன் செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பார்த்தா வேண்டாம் வேண்டாம் என்று பின்னால் நின்று நானும் கூச்சலிடுவதைப்போலவே உணர்ந்தேன்

ஆனால் பிறகு தோன்றியது, அவன் அப்படித்தான். இலக்கை மட்டுமே பார்ப்பான். மரமோ இலையோ கிளையோ தெரியாது. அப்படித்தான் இருந்தான். அதனால்தான் மாவீரன் ஆனான்

ஜெ, வாழ்க்கையில் இப்படி இருக்கிறவர்கள்தான் வெற்றிபெறுகிறார்களா? அதை நினைக்க நினைக்க ஆறவேயில்லை

சாம் ஜஸ்டின்


அன்புள்ள சாம்

அர்ஜுனன் அடைந்த வெற்றி எது? அவன் உண்மையில் எதை வென்றான்? எப்படி வாழ்ந்தான்?

அந்த வினாவையும் சேர்த்தே எழுப்பிக்கொள்ளுங்கள்

ஜெ