Tuesday, November 11, 2014

விழா -3


எழுத்தாளர் அய்யா ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

வெண்முரசு நாவல் வடிவில் வெளிவருவது அறிந்து மிக்க மகிழ்ச்சி.

நாவலில் வரும் புதிய சொல்லாக்கங்களுக்கு ஈடு இணை இல்லை. கருத்து செறிவும், எளிய நடையும் வெண் முரசை இணையத்தளத்தில் மீண்டும் மீண்டும் படிக்கும் ஆவலை தூண்டியது. உங்களது இந்த மாபெரும் முயற்சி வியக்கத்தக்கது. அய்யா முத்துலிங்கம் கூறியது போல் இது உலக மொழிகளில் எந்த மொழிக்கும் இல்லாத பெருமையை தமிழ்மொழிக்கு கொண்டுவரும் என்பதில் ஐயமில்லை.

நாவல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள். 

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

என்ற குறளுக்கிணங்க உங்கள் பத்தாண்டு நூல் திட்டம் வெற்றியடைய எங்கள் நல்வாழ்த்துகள் உரித்தாகுக.

அன்புடன்
நாஞ்சில் பீற்றர்
தலைவர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை