Wednesday, November 12, 2014

எழுதும் மனநிலை

நான் தாசன் இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் முத்துஐயன்கட்டு என்னும் கிராமத்தில் வாழ்ந்து வருகிறேன். உங்கள் இணையத்தளத்தில் உங்களுடைய பல ஆக்கங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இன்று உங்கள் வெண்முரசு நாவல் தொடரை படிக்க தொடங்கியுள்ளேன். அருமையாக உள்ளது.

ஜி மது


அன்புள்ள மது,

இலங்கையின் பல ஊர்கள் காதில் விழுந்துள்ளன. இந்த ஊரும் இதன் பெயரும் விசித்திரமானவை. கட்டு என முடியும் ஊர் ஏதும் தமிழகத்தில் இல்லை என நினைக்கின். கட்டுமரங்களில் இருந்து வந்திருக்கும்போ?

ஜெ


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வெண்முரசு புத்தகங்கள் வெளியீட்டு விழாவுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.வெண்முரசு நாவல்கள் அணைத்தையும் நீங்கள் நினைத்திருப்பது போலவே முடிக்க வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.அதற்கான சூழலும் மனநிலையும்  உங்களுக்கு சாத்தியப்பட வேண்டுமென நினைத்துக்கொள்கிறேன்.

நன்றி
சர்வோத்தமன்.


அன்புள்ள சர்வோத்தமன்

நன்றி

எழுதும் மனநிலை அளிக்கும் உத்வேகமே எழுதச்செய்கிறது

ஜெ