Friday, November 14, 2014

பிரசங்கியார்கள்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

வெண்முரசு விழா அழைப்பிதழ் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானபொழுது இந்த மஹாபாரதக் கலைஞர்கள் யார் என்றே தெரியவில்லையே என்று நினைத்தேன்,அவர்களை பற்றிய விவரங்களை இன்றுதான்  படித்து தெரிந்து கொண்டேன்.உங்களுக்கு இவர்களைப் பற்றி முன்பே தெரியுமா?.தவறாக நினைக்கவேண்டாம்,இவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்துள்ளீர்கள்.ஏனெனில் உங்களின் இந்த தேர்வுக்கு சிறப்பான காரணம் பின்னணியில் இருக்கும் என்று திடமாக நம்புகிறேன்.இந்த பெரியவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

அன்புடன்,

அ.சேஷகிரி.

அன்புள்ள சேஷக்கிரி

சென்னை பேராசிரிய திரு சீனிவாசன் மகாபாரத நாட்டார் கலைவடிவங்களைப்பற்றி ஆராய்ச்சி செய்பவர். மகாபாரதப்பிரசங்கியார்களுக்கு வருடம்தோறும் விழா எடுத்து கௌரவிப்பவர். நான் ஐந்துபேரை தேர்வுசெய்து முன்வைக்கும் பொறுப்பை அவரிடம் அளித்துவிட்டேன். அவர் வந்து அவர்களை அறிமுகமும் செய்துவைத்தார்

ஜெ