Monday, November 17, 2014

மறுபிறப்பு பற்றி மீண்டும்



அன்புள்ள ஜெ 


புரிகிறது.


துரியோதனன் கானாடல் சென்ற போது - வயதடைதல் போலவும், கார்கோடகனை சந்தித்த போது - அவனது இயல்பை நெருங்குவது போல் ஒரு புறம் - அவனையே படைக்கலமாக கொண்டு இயங்கும் ஈரேழு உலகத் தெய்வங்கள் - அவனை தயார் செய்வது போலவும் தோன்றுகிறது - ஆடி கொண்டு - அல்லது ஒலி / ஒளி கொண்டு நுண்ணதிர்வகள் மூலம் உளவியல் உருவங்களை செப்பனிடுவது போல

இது போன்றே கர்ணன், பீமன், ஏன் - குந்தி கூட - இது போன்ற நிகழ்வுகளை எதிர் கொள்வது போல.

இவைகளினூடே புலன்களுக்கு புலப்படாத ஒரு மறைந்த கை ஒன்று எல்லாவற்றையும் அமைப்பது போன்ற பிரமிப்பும் கலந்து - 

மீண்டும் வாசிக்க தூண்டுகிறது 

நன்றி