Sunday, November 30, 2014

கிருஷ்ணனின் தேர்வு



பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

' நீலத்தில்' பாலகனாக வந்து அவனது எண்ணிறந்த செயல்களால் நம்மை  கிறங்கடித்தானால் என்றால் இதில் இப்பொழுதே அவன்  சேட்டைகளை ஆரம்பித்து விட்டான்.ஐயோ பாவம் விதுரர் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் படும் அவஸ்தை.

 “விதுரரே, இவ்வரசில் சூதரான நீங்கள் இருக்கும் இந்த இடமே உங்களுக்கு எதிரானது. அதை எண்ணிப்புழுங்கும் ஷத்ரியர்களின் அகத்தின் ஆழத்தை உங்களுக்கு எதிராகத் திரட்டுவது என்னைப்போன்ற ஒருவனுக்கு ஓரிரு சொற்களின் பணி மட்டுமே” என்றான் கிருஷ்ணன். “அப்படி உங்களை அழித்தால் உங்கள் மைந்தர்களையும் விட்டுவைக்க மாட்டேன். உங்கள் ஒருதுளிக் குருதிகூட இப்புவியில் எஞ்சவிட மாட்டேன்.”
நடுங்கும் கைகளைக் கூப்பி “ஆம், உன்னால் அதைச் செய்யமுடியும். ஏனென்றால் நீ கம்சனின் மருகனும்கூட” என்றபடி விதுரர் மெல்ல உடல் தளர்ந்தார். “இனி நீ கொண்டுசெல்லப்போகிறாய் அனைத்தையும். என் காலம் முடிந்துவிட்டது. நான் நம்பிய அறமும் நீதியும் முறைமையும் எல்லாம் வெறும் சொற்களாக ஆகிவிட்டன….” என்று தழுதழுத்த குரலில் சொன்னார்."

ஒரு சந்தேகம்,துரியோதனன் தனது குருவான பலராமரின் பொருட்டு எப்படியாவது அஸ்தினபுரி  யின் படைகளைப் பெற்று  ஏகலவ்யனை வெல்ல துடித்து கொண்டு இருக்கும் போது,அதை நன்கு அறிந்த கிருஷ்ணன் ஏன்அவனை விலக்கி,அர்ச்சுனன் தலைமையில் படைகளை கேட்டுப்  பெற்றான்?.அவன் யாதவ குருதியை சேர்ந்தவன் என்பதாலா?.

அன்புடன்,

அ .சேஷகிரி.


அன்புள்ள சேஷகிரி
,

நாவலில் அது தெளிவாகவே உள்ளது. அவன் நாடுவது தன் சொந்த அத்தையின் உதவியை. அதௌ. அவள் மறுக்கமுடியாது என்பதர்காக

மகாபாரதம் முழுக்க கிருஷ்ணன் துரியோதனன் முதல் தேர்வாக இருக்க அர்ஜுனனைத் தேர்வுசெய்வது உள்ளது. அதற்கு தத்துவார்த்தமாக பல விளக்கங்கள் உள்ளன. மாணவனை ஆசிரியன் தேடிவருகிறான், தெய்வம் மனிதனைத் தேடிவருகிறது என்றெல்லாம்

ஜெ