Tuesday, December 30, 2014

முதலில் உணர்ந்தவர்



அன்புள்ள ஜெ

ராமன் கிருஷ்ணன் இரண்டையும் பூர்ணாவதாரங்கள் என்பார்கள். இரு வாழ்க்கையும் இரண்டுவகையில் முக்கியமானது. ராமன் வாழ்க்கை அவதி நிரம்பியது. கிருஷ்ணன் வாழ்க்கை அப்படி அல்ல. அது கொண்டாட்டம். ஆனால் இரண்டுமே பெரிய போராட்டங்களும்கூடத்தான்

நான் அடிக்கடி சிந்திப்பேன். கிருஷ்ணனை மட்டும் ஏன் குழந்தையாக நினைத்தது \நம்முடைய பாரம்பரியம்? ராமனை ஏன் அப்படி உருவகிக்கவில்லை? ஏனென்றால் கிருஷ்ணனிடம் ஒரு விளையாட்டுத்தனம் இருக்கிறது. செய்வது எல்லாவற்றையும் விளையாட்டாகவே செய்துவிட்டுப்போனவன் அவன்.

அந்த விளையாட்டுத்தனத்தை அவன் பிள்ளைப்பிராயத்துக்கு extend செய்துவிட்டார்கள் நம்மவர்கள். அதுதான் அவனை சின்னப்பிள்ளையாகப் பார்க்கவைக்கிறது . அதுதால் லீலாவினோத கிருஷ்ணன்

அந்த விளையாட்டுத்தனத்தை அதன்பிறகு பெரிய கிருஷ்ணனில் blow up செய்தார்கள். ஆகவேதான் கோலாகலனாகிய கிருஷ்ணன் வந்தார். பதினாறாயிரத்தெட்டு மனைவிகளை அடைந்த கிருஷ்ணன் கற்பனைசெய்யபபட்டார்

இன்றைக்கு விதுரர் கிருஷ்ணனின் விஸ்வரூபமான புன்னகையை உணரக்கூடிய இடம் அந்த சித்திரத்தை அளிக்கிறது. அவன் யாரென்று முதலில் உணர்ந்தவர் விதுரர்தான்

சுவாமி