Tuesday, December 30, 2014

குழந்தை கௌரவர்



ஜெ,

குண்டாசியும் யுயுத்ஸ்வும் இரு சின்னப்பையன்களாக அறிமுகமானதை நினைத்துப்பார்க்கிறேன். இருவரும் இரண்டுவகையிலே மாறிவிட்டிருக்கிறார்கள். திக்கித்திக் பேசும் சின்னப்பையன்கள். இப்போது யுயுத்ஸு ஒரு சின்ன தருமனாக ஆகியிருக்கிறான். குண்டாசி குடிகாரனாக மாறியிருக்கிறான்

இதைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம். இளமையிலே நமக்கு தெரிந்த பல பையன்கள் கொஞ்சம்கூட சம்பந்தமில்லாத மனிதர்களாக மாறி நம் முன் வரும்போது பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் ஒரு மரம் வளைந்து நிற்குமா என்பதை விதையைப்பார்த்துச் சொல்லமுடியுமா என்பார்கள். அதை நினைத்துக்கொண்டேன்

வாழ்த்துக்கள் ஜெ

ராஜாராம்