Tuesday, January 27, 2015

காளியின் கால்கள்



ஜெ,

வெண்முரசை வாசிக்கும்போது ஒவ்வொரு முறையும் நீங்கள் திரௌபதிக்குப் பாதாதிகேச வர்ணனைதான் கொடுக்கிறீர்கள் என்பதைக் கவனித்தேன். காளியை அப்படித்தான் வர்ணிப்பார்கள். கேசாதிபாதம் என்பது பக்தியில். யோகமரபில் சாக்த மரபில் பாதாதிகேசம் . உங்கள் கேரள வளர்ப்புப்பின்னணியில் இது உங்கள் மனதில் பதிந்திருக்கலாம்

இப்போது வாசிக்கும்போது அவளுடைய வர்ணனைகளை மீண்டும் மீண்டும் கவனிக்கிறேன். மென்மையான கரிய கால்களுக்கு அளித்திருக்கும் ஏராளமான அழகான வர்ணனைகள் மனசை கொள்ளைக் கொள்கின்றன. காளிஸ்தவம் என்று நாராயணகுரு எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் சாகித்ய அகாடமி பிரசிரித்திருக்கிறது. அந்தப்பாட்டு அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். அது நினைவுக்கு வந்தது

காளியின் கால்கள் அழகானவை. சிவனின் நெஞ்சில் வைத்தவை. ஆலாலகண்டன் சூடிய மலர்கள் அவை

சுந்தரம்

அன்புள்ள சுந்தரம்

அது காளிநாடகம். மொழியாக்கம் வினய சைதன்யா

ஜெ