Friday, February 27, 2015

மனத்திரை ஓவியங்கள்



ஓவியங்கள் வரவில்லையெனினும் நான் என் மனதில் வரைந்து கொண்ட ஓவியங்கள் இவை.
வெண்முகில் நகரம் 4
1. கடலோர மனலில் பதிந்து கிடக்கும் ஜலஜையின் செம்பவளம்
2. நீரலை மாளிகை – இதில் சுவர்கள், பீடங்கள் என அனைத்தும் நீரலைகள். ஒரு கனவு மாளிகை.
3. பார்த்தனை ஆடிப்பிம்பமாக பார்க்கும் அணிசெய்துக் கொண்ட தருமன்
வெண்முகில் நகரம் 5
1. தருமனை குழந்தையை அழைப்பது போல இருகை விரித்து அழைக்கும் திரெளபதி
வெண்முகில் நகரம் 6
1. தருமன், விதுரர், திரெளபதி உரையாடல் – ஷாத்ரம் பொங்கும் தருமன்தான் இந்த ஓவியத்தின் மையம்
வெண்முகில் நகரம் 7
1. யானையைப் போல் மெதுவாக காலடிவைத்து வந்து வாயிலில் நிற்கும் பீமன்
2. மிருஷை, காருஷை, கலுஷை மூவரையும் அணைத்துக்கொள்ளும் பேருடல் கொண்ட பீமன்
வெண்முகில் நகரம் 8
1. பீமன் – திரெளபதி கங்கை நீர் விளையாட்டு. ஆடலின் ஒரு கணம் ஓவியத்தில் வரவேண்டும்.
வெண்முகில் நகரம் 9
1. பீமனை தன் மேல் ஏந்தி நான்காம் நிலா காணும் திரெளபதி
வெண்முகில் நகரம் 10
1. தருமன், துருபதன், அர்ஜூனன் உரையாடல். நாற்கர பீடம் மத்தியில்.
வெண்முகில் நகரம் 13
1. திரெளபதியின் இடையுடன் இடைசேர்த்து நிற்கும் அர்ஜூனன்
2. ஆடை அணிகலன்கள் சிதறிக் கிடக்க மஞ்சத்தில் சுருண்டு கிடக்கும் திரெளபதி. அவளை நோக்கும் அர்ஜூனன்
3. பளிச்சிடும் வாளால் அர்ஜூனனை வெட்ட விழையும் திரெளபதி
இளையராஜா