Tuesday, February 24, 2015

நானன்றி நீயுமில்லை.



ஜெ

பத்தொன்பதாம் அத்தியாயத்தைப்பற்றி இவ்வளவு தாமதமாக எழுதுகிறேன். எழுதவேண்டும் என்று எண்ணினேன். ஆனால் எங்கே இதைத் தொகுத்துக்கொள்வது என்றே தெரியவில்லை. இப்படித்தோன்றியது

இளங்காலைகளின் அரசி.
காதலின் கனவுகளின் தென்றலின் தோழி.
மலர்ப்பொடியின் சிலந்திவலையின்
பட்டுக்கூட்டின் இளம்புழுதியின்
இறகுப்பிசிறின் மென்மழையின்
பனிப்பொருக்கின் இறைவி.

என்று தேவியை உருவகிக்கிறது ஒரு மனம். அது அப்படியே சென்று உச்சகட்டத்தில் இன்னொரு அனுபவத்தை அடைகிறது


தோலுரிந்த நாகங்கள் நெளியும் வழுக்கு.
பீளையும் சலமும் குழம்பும் சழக்கு.
ஐந்து பேரிடர்களின் அரசி.
பிறப்பு, நோய், மூப்பு.
துயர்,இறப்பென்னும் ஐந்து அரக்கர்கள்
புதைகுழி புளந்து வேர்ப்பிடிப்பறுத்து
எழுந்து வருகின்றார்கள்
சீழ்சொட்டும் கைகளுடன் உன்னைத் தழுவுகிறார்கள்.
உன் ஐந்து வாயில்களிலும் புணர்கிறார்கள்.
மலநீரிழியும் மலையில் ஏறும் புழுக்கள்.
கழிவுப்பெருக்கே, இழிமணச்சுழியே
கீழ்மைப் பெருங்கடலே

இந்த இரண்டு அனுபவங்களையும் சமன்படுத்தி ஒரு உச்சநிலையை அடைகிறது அந்தமனம்

இவையனைத்தும் நானே.
நானன்றி ஏதுமில்லை.
தேவி, நானன்றி நீயுமில்லை.
ஓம் ஓம் ஓம்!

இந்தப்பயணமாக இந்த அத்தியாயத்தை ஒருமாதிரி வகுத்துக்கொண்டேன். இனிமேல்தான் ஒவ்வொன்றாக வாசித்து அர்த்தம் கொள்ளவேண்டும்

ஜெயராமன்