Tuesday, March 31, 2015

பலராமர்




திரு ஜெயமோகன் அவர்களுக்கு, 
ங்கள் திவுகள்,சிறுகதைகளை மீபத்தில் டித்து ருகிறேன்.
பாரத்தின் மீது எனக்கு ஈர்ப்பு உண்டு.வெண் முரசு அத்தியாயங்களை (தொடர்ச்சியாகஇல்லாவிடினும்)தேர்வு செய்து டித்து ருகிறேன். 
கிருஷ்ணன், குனி இடையேயானடை ஆட்டஅத்தியாயம் அற்புதம். 
நான் கவனித்தற்றொரு விஷம் பாத்திரஉருவங்கள். 
ஊடங்களின் பொதுவானஇயல்பு நேர்மறை மற்றும் எதிர்மறை (என அவர்கள் உருவகம் செய்த)கதாபாத்திரங்களை நேர்மறை அல்லது எதிர்மறையின் உச்சத்தில் வைத்து சித்தரிப்பது. இதனை உடைக்கமுயன்றர்களும் உண்டு.(.ம். ஆர்.எஸ்.னோகர் நாடங்கள்). அதிலும் அவர்கள் தாபாத்திரத்தின் ழக்கமானஉருவத்தின் நேர் எதிர் முனையில் அவர்களை நிறுத்துவது ழக்கம்.(இது தை சொல்லிகளின் பொதுவானஇயல்போ?)  
வெண் முரசில் பல கதாபாத்திரங்கள், முக்கியமாக லராமர் பாத்திரஉருவம் மேற் சொன்னஇயல்பை அடித்து நொறுக்கி விட்டதுஇது போன்றபாத்திரங்கள் பிற படைப்புகளில் (பெரும்பாலும்) நாசூக்கானஉருவத்திலேயே சொல்லப்பட்டுள்ள‌. 
நேர்மறையோ,எதிர்மறையோ உடல் மொழி,செயல்கள் வெண் முரசின் எல்லா  தாபத்திரங்களிலும் இயல்பானவையாகஇருக்கிறது. 
ஹாபாரத்தின் மூலத்திலும் இப்படித்தானா. அல்லது இவை பெரும்பாலும் உங்கள் ற்பனையில் டித்தஉருவங்களா? 
அன்புடன்
எஸ்.மேஷ் கிருஷ்ணன்

அன்புள்ள ரமேஷ் கிருஷ்ணன்,
பலராமன் மகாபாரதத்தில் ஒரு மெல்லிய சித்திரம் மட்டுமே. உண்மையில் ஒரு கதாபாத்திரத்திற்குரிய எந்த அம்சமும் அதில் அவருகில்லை. அவர் பத்து அவதாரங்களில் ஒருவர். ஆனால் அவதார நொக்கம் என ஏதுமில்லை. துரியோதனனுக்கு ஆசிரியராக இருந்தார் என்பதற்குமெல் ஒன்றுமே செய்யவுமில்லை

கிருஷ்ணனின் உடன்பிறந்தான் என்ற ஒரு கதாபாத்திரம் வியாசபாரதத்தில் இருந்திருக்கலாம். கலப்பையை ஏந்திய வேறு ஏதோ இனக்குழுவுடைய தெய்வம் அதனுடன் கலந்திருக்கலாம். பின்னர் அந்த தெய்வமே முக்கியத்துவமிழந்திருக்கலாம்.

நான் உருவாக்குவது மகாபாரதம் அளிக்கும் குறிப்புகளைக்கொண்டு ஒரு விரிவான சித்திரம்

ஜெ