Thursday, May 28, 2015

இந்திரநீலம்

அன்புள்ள ஜெ, வணக்கம்!

தங்கள் மனதில் சாந்தி நிலவ இயற்கை பேரருள் கருணைகூரட்டும்.
தாங்கள் எழுதுவது புனைகதையோ, சட்டகங்களுக்குட்பட்ட தொழில் நேர்த்தி கதையோ இல்லை என்பதை நாங்கள் நன்கு அறிந்திருக்கிறோம்.
அதனால் இடைவெளிகளைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்.எங்களுக்கும் அதுஇல்லை. 

"இந்திர நீலம்" வண்ண பேதங்களில் ஒளிரும் எண்ண வடிவங்களை இதயம் உறிஞ்சட்டும்.

இந்த கோடை வெம்மையில்
கதவை திறந்து வைத்திருக்கிறோம். (காற்று உள்ளே வரட்டும்)
கொந்தளிப்பான மனநிலையை ஊக்குவிக்க வேண்டாம். அந்த சூழ்நிலையிலான எழுத்துக்கள் எங்களை சுழற்றியடிக்கும்.
காடாற்று வெள்ளமென சீறிக்கொட்டும் போது,  குற்றாலத்தில் குளிக்க அரசே தடைபோடுகிறது. எனில், உங்கள் மனக்குகையில் சிறுத்தை எழ - மண்டை சுரப்பை நாங்கள் தொழுகிறோம்..!!
அன்புடன்,

எம்.எஸ். ராஜேந்திரன்.
திருவண்ணாமலை.