Wednesday, May 13, 2015

இரண்டாமிடம்




அன்புள்ள ஜெ

நலம்தனே?

நானும் நலமே

வெண்முகில்நகரம் முடித்து காண்டவத்துக்காகக் காத்திருக்கிறேன். வழியில் பலவிஷயங்களைத் தொட்டுத்தொட்டு வாசித்தேன். நான் வெண்முரசு செம்பதிப்பு முழுக்கவே வாங்கி வைத்திருந்தாலும் இணையத்தில்தான் இப்படி குறுக்கும் நெடுக்குமாகச்சென்று வாசிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கின்றன.




துரியோதனனுக்கும் பீமனுக்குமான சண்டையை நுணுக்கமாகப்போய் வாசித்தேன். துரியோதனனின் பிரச்சினை அவனால் இரண்டமிடத்தில் இருக்கமுடியாது என்பதுதான். ஆனால் இப்போது அஸ்தினபுரி அவனுக்கு வந்துவிட்டது. அதுதான் பெரியநாடு. ஆகவே அவன் முதலிடம். ஆகவே அவனுக்குப்பிரச்சினை ஏதும் இல்லை

என்ன பரிதாபம் என்றால் இது இப்படியே நீடிக்காது என்பதுதான். மிகவிரைவிலேயே இதெல்லாம் இல்லாமலாகும். இந்திரப்பிரஸ்தம் வளர்ந்து பெரிதாகும்போது இரண்டாமிடத்திலே இருக்கமுடியாதவனாக ஆகி துரியோதனன் கொந்தளிக்க ஆரம்பிப்பான். அதுதான் தொடக்கம் என்று நினைக்கிறேன்

ஜெயராமன்