Tuesday, July 21, 2015

கண்ணிகள்

ஆசிரியருக்கு,

மகா பாரதத்தில் உள்ள மைய்ய பாத்திரங்களுக்கு இணையாகவே  வெண் முரசில் உள்ள  ஓர பாத்திரங்களும் படைக்கப்பட்டிருக்கும். அது விசித்திர வீரியனானாலும் பூரிசிரவஸ் ஆனாலும் இப்போதைய திருட்டத்தியும்னன் ஆனாலும் இது பொருந்தும்.

அதேபோல மகாபாரத்தில் உள்ள முக்கிய நிகழ்வுகளுக்கு  இணையாகவே இந்த ஓர பாத்திரங்களுக்கு நிகழும் நிகழ்வுகளும் அமைக்கப் பட்டிருக்கும். வெண் முரசில் கூடுதல் அம்சம் என்னவென்றால் முக்கிய நிகழ்வுகளுக்கு இணையாகவே அன்றாட நிகழ்வுகளும் விவரிக்கப் பட்டிருக்கும் அது முக்கிய சம்பவங்களுக்கு பங்களிக்கக் கூடியதாக அமைந்திருக்கும். 

இன்று சாத்தியகியும் திருட்டத்தியும்னனும் குதிரையில் செல்லும் அந்த மென்னடையும்,புறக்காட்சிகளும், மாளிகைகளும், அவர்கள் கோமதியின் ஏரியை அடைவதும், திருட்டத்தியும்னன்  அந்தியில்  திகழ்வதும் மீன்கள் அவன் நிழல் தீண்டுவதும்  அதி அற்புதம். இது சியாமந்தகத்திற்கும் சுப்ரையின் நினைவுக்கும் இணையானது.

கிருஷ்ணன்.