Saturday, August 15, 2015

வெண்முரசு ஆடியோ


அன்புள்ள திரு. ஜெ அவர்களுக்கு வணக்கம் 

சில மாதங்களுக்கு முன்னால் தங்களிடம் வெண் முரசு நாவலை ஒலிவடிவமாக மாற்ற அனுமதி கேட்டேன். உங்கள் அனுமதி கிடைத்தது. மிகுந்த உற்சாகத்துடன் துவகினேன். ஆனால் அது எளிமையான காரியமாக எனக்கு தெரியவில்லை. ஆனால் விடா முயற்சியாக முதல் நூலை முடித்துவிட்டேன். 

அந்த வேலை செய்த போது ஆனந்தமாகவும் உற்சாகமாகவும் இருந்ததை உணர்ந்தேன். அப்போதெல்லாம் உங்களை நினைத்துக்கொண்டேன்.

ஐம்பது பகுதியையும் தொகுத்து கிழ்லுள்ள தளத்தில் பதிவிட்டு இருக்கிறேன்.

நன்றி 

சிவக்குமார்