Sunday, August 30, 2015

உடலோம்பல்.




குசலன், திருஷ்டத்யுமனன், சாத்யகி மூவரும்  கள்ளுண்டு முடித்தப்பின்பு ஒரு உண்மையை புலப்படுத்துகின்றார்காள். அது உடல்பலம் எத்தனை அத்தியாவசியமானது என்பது விளக்குகிறது. .

மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்சா, என்னும் ஆறு சக்கரங்கள் மலர சரியான உடல்பலம் வேண்டும். உலகாதய நலன்களை உண்டாக்கும் முதல் மூன்றுச்சக்கரங்களையும் உண்ணுதல், சுகித்தல், உழைத்தல் என்னும் கடமைகளின் வழியாக தூண்டும் செயல் இல்லாமல் குசலன் அதை தவறவிடுகின்றான். ஆனால் ஆன்மிக நலன் செய்யும் உடலின் மேல்தளச்சக்கரங்கள் மலர்வதன்மூலம் உச்சத்திற்கு சென்று நெற்றிக்கண் திறக்கின்றான். நெற்றிப்பொட்டில் யோகிஸ்வரன் பாத தரிசனம் காண்கின்றான். அங்கிருந்து சகஸ்ராரசக்கரத்திற்கு பயணிக்க முடியாமல் கீழ் இரங்குகின்றான். கீழ் சக்கரங்கள் பலம் இழப்பாதல் புழுபோலவும், மேல் சக்கரங்கள் மலர்வதால் பாம்புபோலவும் ஆகின்றான். புழு பாம்பென்று ஆகும் மாற்றம் என்பது அருமை. போதை ஏறி அங்கேயே விழுகின்றான் குசலன்.  

சாத்யகி கள்ளுண்டு மயங்கும் முதல் கணத்திலே வரும் பரவசத்திலேயே விடுதலை என்பது ஒரு மனமயக்கு. “அ” போட்ட உடனேயே சரித்திரம் படைத்த எண்ணம் அவனுக்கு. போதை ஏறினாலும் உடல் பலத்தால் தல்லாடி தல்லாடி சாத்தியகி பயணிக்கின்றான். குசலனில் இருந்து சாக்தியகி உடல்பலம் கூடி உள்ளது.  சாத்தியகியின் குதிரையையும், சாத்தியகியையும் திருஷ்டத்யுமன்தான் காப்பாற்றி எடுத்துச்செல்கின்றான். சாத்யகியின் உடல்பலத்தைவிடவும், திருஷ்டாத்யுமன் உடல் பலம் அதிகம். உடல்பலம் என்பதுதான் எத்தனை தேவையாக இருக்கு இங்கு.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோவில் கொண்டானென்று
உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே- திருமந்திரம்.

யுத்தத்திற்கு மட்டுமல்ல ஆன்மிகத்திற்கும் உடல் எத்தனை முக்கியம் என்பது புரிகின்றது. குசலன் உடல்பலத்தோடு இருந்தால் எத்தனை பெரிய முனியாகி இருப்பான். வெறும் களிமகனாக பரிகாசத்திற்கு ஆளகிவிட்டான். பெரும் கவிஞர்கள் வெறும் குடிகாரனாக மாறி, தங்கள் கனத்த தலையை தூக்கமுடியாமல், மண்ணில் புறண்டு நலம் இழக்கும் கொடுமை  நினைவில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.  

நன்றி
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.