Sunday, February 28, 2016

நாகர்கள் யார்?






வெண்முரசின் பாம்புகளை ஆரம்பத்திலேயே விழைவு என்று சொல்லிவிடீர்கள். இப்போது அவர்கள் தொன்மையான குடிகள் என வருகிறது. உலூபி கதையிலும் அவர்கள் விழைவாகவே சொல்லப்படுகிறார்கள். அத்துடன் அர்ஜுனனும் பீமனும் செல்லும் நாக உலகங்களும் விழைவின் பாதாளங்களாகவே வருகின்றன.

அப்படியென்றால் இந்த நாகர்கள் யார்? அவர்கள் தொன்மையான அடிப்படி உணர்ச்சி மட்டும் கொண்டவர்களாக இருந்தார்களா? ஆகவேதான் அழிந்தார்களா? அவர்களை விழைவு மானுட உருவம் கொண்டவர்கள் என ஏன் நம் முன்னோர் நம்பினர்?

இந்தக்கோணத்தில் சிந்தித்தால் பல இடங்களுக்குச் செல்லமுடிகிறது. மகாபாரதத்தை புதிய கோணத்தில் வாசிக்கவைக்கிறது

ராம்