Tuesday, April 19, 2016

கனவுகளின் வெளி



ஜெ

கனவுகளும் நோயும் ஆழ்மனமும் கலந்து குழம்பி ஒரு பெரிய பித்தாக இருக்கிறது பன்னிருபடைக்களம். இதுவரை நாவலை வாசித்துவந்தவர்களால்தான் இந்நாவலை முழுமையாக புரிந்துகொள்ளமுடியும்.

உதாரணமாக பாஞ்சாலி சுயம்வரத்திற்குச் செல்லும்போது துரியனுக்கு இருந்த மனநிலை, அவன் நன்பனுக்காக விட்டுக்கொடுத்தது, கணிகர் அவனை பற்றி சொல்லும் பல நுட்பமான இடங்களைப்புரிந்துகொண்டால் மட்டுமே அவன் இப்போது கண்ட கனவைப் புரிந்துகொள்ளமுடியும்

சூரியகவசன் என்று கர்ணனைச் சொல்லலாம். ஆனால் ஆயிரம் கவசம் அணிந்தவள் பாஞ்சாலிதான். வெண்முரசு ஆம்பிகுயஸ் ஆகிற இடங்கள்தான் முக்கியமானவை

மனோகரன்