Saturday, May 14, 2016

இருள் அன்னையின் பிள்ளைகள்


ஒவ்வொரு  வீட்டிலும்  ஆண் மகன்கள் தந்தையின் சொல் மீறும் காலம், எந்த காலத்திலும்  நடப்பது தான். முன்பு ஒரு முறை ,சேதி நாட்டு இளவரசிகள் விசயத்தில் பாண்டவர்களுடன் துரியோதனன் பகை கொண்டமையின் போது துரியோதனன் ,துச்சாதனன்  மற்றும் அவர்களை காக்க இடையில் நுழைந்த கர்ணரும், மத வேழம் திருதராஷ்டிரால் தாக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்து, பின்பு பல காலங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு உடல் தேறினர். அப்போது கூட -- துரியோதனன் -- "திரும்பி உடைந்த குரலில் யுதிஷ்டிரனிடம்இது தண்டனை மூத்தவரே. தண்டனையைத் தரவேண்டியவர் தந்துவிட்டார்என்றான். “நீங்களும் உங்கள் இளையவர்களும் எங்களை தண்டிக்க வேண்டும் மூத்தவரே. எந்தத் தண்டனைக்கும் நாங்கள் சித்தமாக இருக்கிறோம். உயிர்கொடுப்பதென்றால் கூட "-‘வெண்முகில் நகரம் – 87 -  

  அன்று திருதராஷ்டிரர் தன் தந்தை தண்டித்ததை அரக்கு மாளிகை நிகழ்வுக்கு கிடைத்ததாய் துரியோதனன் கருதினான். தந்தைக்கு அடங்கி நின்றான்.ஆனால் இன்று தன் தோள் தோழன் ஜரா சந்தனின் மரணம் துரியோதனை  மிகவும் துயர் கொள்ள செய்து விட்டது .அவனின் நிகர் நிலைமை நிலைகுலைய தொடக்கி விட்டது.ஆனாலும் தந்தையுடன் மல்லுக்கு நின்றவன் தன் தாயின் சொல் கேட்டு தன் முடிவை மாற்ற நுட்பமான காரணங்கள் இரண்டு உள்ளன 

‘.1."படைகொண்டு செல்வதும் மண் வென்று முடிசூடுவதும் ஆண்களின் உலகம். ஆனால் ஒரு தருணத்திலும் பெண்டிரின் நிறைமதிப்பு அழியும் செயல்களை ஆண்மகன் செய்யலாகாது.நாமனைவரும் அன்னையின் கருவறையில் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் தெய்வங்கள் வாழும் கருவறை. அங்கரே, நாங்கள் ஜரர்கள் ஒருபோதும் பெண்விலங்கை வேட்டையாடுவதில்லை.என் குருதியில் ஓடுவது ஜரா குலத்தின் முலைப்பால். அங்கு எங்கள் காடுகளில் பதினெட்டு அன்னையர் நிரைவகுத்திருக்கிறார்கள். பதினெட்டு கருவறைகள். பதினெட்டு முலைச்சுனைகள். பெண்டிரை சிறுமை செய்யும் எச்செயலையும் ஜரை மைந்தன் ஏற்கமுடியாது" - ஜரா சந்தன் துரியோதனனிடம் சொன்னது -வெய்யோன் – 54 - 

 ஜரா சந்தன் தான் அரக்கன் என்று சத்திரிய அரசர் நினைக்கும் அளவுக்கு கொடுமைகள் செய்தாலும் தாயின் மதிப்பு மற்றும் அருமை தெரிந்தவன் - ஆதலால் துரியோதனன் ஜரா சந்தன் அறநெறியில் தாயின் சொல்லை தட்ட முடியாமையில் நிற்கிறான்.தாயின் சொல்லை மீறினால் காந்தாரியின் நிறை மதிப்பு அழியும் என உணர்ந்து பணிந்து விட்டான் துரியோதனன்.2. பேரரசர் ஜரா சந்தனின் வளர்ப்பு தாய் ஜரை வாழுமிடம் இருண்ட குகை தான்.தன் மகன் பேரரசன் என ஆடம்பரமான வாழ்வை விளையாதவள் - இருட்டு குகையில் முதாதையரின் துணையுடன் வாழும் வாழ்க்கை தான் அது .துரியோதனனின்  தாய் வாழ்வும் அதற்க்கு நிகர் தான் - ஹஸ்தியின் அரண்மனையில் கண்களை கட்டிக்கொண்டு இருளில் தான்  வாழ்கிறாள் - இருளில் வாழும் தாயின்  பிள்ளைகள் அது ஜரா சந்தனாகட்டும் அல்லது துரியோதனனாகட்டும்  - ஒரே சிந்தனை நேர்க்கோட்டில் நிற்கிறார்கள் - தாய் சொல்லே வேதம் . நன்றி ஜெயமோகன் அவர்களே !

தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர்