Wednesday, June 29, 2016

கௌரவர் சபை



ஜெ

இதை எப்படிச் சொல்வீர்களென ஒவ்வொரு நாளும் விதிர் விதிர்த்திருந்தேன்
கடுங்குளிரிலும் போர்வைக்குள் சுழலும் வெப்ப மூச்சென உள்ளே சுழன்று கனன்று காத்திருந்தேன் வாலையென, கன்னியென, மணவாட்டியென, அன்னையென அரசியென, கொற்றவையென, இருபாலுமற்ற ஆதி உயிரென....
அற்புதம் மாற்றென்று சொல்ல ஏதுமிலாதபடி நின்றாடுகிறீர்கள் களத்தில்...என் பாட்டன் பாரதியும் காணாத பார்வை.. வாழ்க....

கிருத்திகா ஸ்ரீதர்