Tuesday, August 16, 2016

களங்கமின்மை





ஜெ

இன்றைய வெண்முரசில் குரங்கின் வருகை என்னை மலரச்செய்தது. இப்போது வெண்முரசு தர்க்கங்களுடன் தத்துவமாகாச் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் பிரயாகையில் எல்லாம் அது ஒருவகையான இன்னொசென்ஸை அடைந்தது. அந்த எளிமையான அழகான உலகத்தை நினைவுபடுத்தியது. அப்போது அவ்வளவு முக்கியமானதாகத் தெரியவில்லை. ஆனால் இப்போது நினைக்கும்போது தருமனைப்பின்னால் வந்து வேடிக்கைபார்த்த அந்தக்குரங்கும் அந்தக்குரங்குகளின் பிகுவும் எல்லாம் அப்படி ஒரு அற்புதமான நினைவாக நீடிக்கின்றன

லட்சுமணன்