Wednesday, August 31, 2016

சாமானியன்




ஜெ

சகதேவனின் கதாபாத்திரம் எதையுமே செய்யாமல் அவ்வப்போது பேசுவதன் மூலமே தெளிந்து வந்துகொண்டிருக்கிறது. மாறாத விவேகம் கொண்டவனாக அவன் தெரிகிறான். அவனுக்கு எல்லாமே தெரியும். தெரிந்தும் ஒரு சின்னப்பையனாக இருந்துகொண்டே இருக்கிறான். ந்குலனும் அவனும் இரட்டையர். ஆனால் நகுலனிடம் ஒரு விளையாட்டுத்தனம் இருந்துகொண்டே இருக்கிறது. சகதேவனிடம் அது இல்லை. அவன் முனிவர் போல இருக்கிறான்

இன்றைக்கு அவன் சொன்ன வரிகள் அபாரமானவை. மானுடன் உணர்ச்சிநிலைகளிலெப்படியெல்லாம் வேசம் போடுகிறான் என்னென வகையில் நடிக்கிறான் என்று  சாட்டையடி போல சொல்லிக்கொண்டே செல்கிறான். கடைசியில் தன்னைப்பற்றிச் சொல்லிமுடிக்கிறான்

மாவீரனாகவோ மாபெரும் தொன்மமாகவோ ஆகாது எளிய தருணங்களினூடாகவே வாழ்ந்து முடிபவன் மகிழ்வுடன் இருக்கிறான்

மாமனிதர்களாகிய மூன்று அண்ணன்களின் தம்பி அதைச்சொல்லும்போது மிகப்பெரிய அர்த்தம் வுந்துவிடுகிறது

சண்முகம்