Monday, August 22, 2016

உண்மையின் பாதை

 
அன்புள்ள ஜெ

உங்கள் வெண்முரசு ஆக்கங்களில் “சொல்வளர் காடு” பருவமே இது காறும் நீங்கள் எழுதியவற்றில் என்னை மிகவும் கவர்ந்தது என்பேன்.

எனக்குள் ஒவ்வொரு பதிவும் ஏற்படுத்தும் உணர்வுகளை வடிக்க எனக்கு சொல் வன்மையோ அல்லது உணர்வுகளை பகிறும் திறனோ இல்லை.

ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பல ஆயிரக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நடந்திருக்குமா இல்லையா எனத் தெரியாது என்றாலும் உங்கள் புனைவுகள் மனதிற்குள் ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் ஒரு மாதிரியான உண்மை பொருளை நோக்கி என்னை இழுத்துச் செல்கின்றது போன்ற ஒரு உணர்வு.

உண்மையை நோக்கி மனது யோசிக்கும் போது தற்போது சந்தித்து வரும் நடைமுறை வாழ்க்கை சிக்கல்களை சமாளிக்க ஒரு தெம்பு கிடைப்பது போல் உணர்கிறேன்.

உங்கள் ஆக்கங்கள் எனக்கு ஒரு தெரபி போல் இருக்கிறது.

வாழ்க பல்லாண்டு.

அன்புடன்
மாலா