Sunday, August 21, 2016

பூதம்





ஜெ

இன்று வந்த

மானுடரை ஒவ்வொரு வயதுக்கும் அப்பருவத்திற்குரிய பூதங்கள் பிடித்தாட்டுகின்றன. என்னை சொல்பூதம் ஆண்டது. பின்னர் காமம் கைப்பற்றியது. பொருள்பூதம் கையிலிட்டு விளையாடியதுண்டு. நீ வந்தபோது என்னை ஆண்டது நானறியா பூதம் ஒன்று 

என வந்த வரியை பலமுறை வாசித்தேன்

அனைத்தையும் விட்டுவிட்டுச் செல்பவர் தன்னை இப்படித் தொகுத்துக்கொள்கிறார். எனக்கு இப்போது வயது 46 தான் ஆனால் இந்தவயதிலேயே என்னால் இரண்டு பூதங்களை அடையாளம் காணமுடிகிறது
பிரபாகர்