Wednesday, August 31, 2016

சகதேவன்



 ஜெ

சகதேவனை எண்ணினால் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் எந்த மயக்கங்களும் இல்லாமல் மனிதர்களைப்பார்க்கிறான். கசப்பை கசப்பென மாயமே இல்லாமல் சொல்கிறான். அந்த வெறுமைமேல் ஒரு யோகியைப்போல அமர்ந்திருக்கிறான். பாண்டவர்களில் ஆழமானவன் அவந்தானா என நினைக்கத் தோன்றுகிறது

ஆண்பெண் உறவின் இயல்பே அதுதான், மூத்தவரே. எத்தகைய மேன்மைகொண்டது என்றாலும் அது கனவென்றே அழிந்து மறையும். இவ்வுலகில் எளிதில் மறையாதது குருதியுறவு மட்டுமே. அதுவும் குருதியால் அழிக்கப்படக்கூடும். மானுடர் கொள்ளும் எவ்வுறவிலும் இறுதிச்சொல் என ஒன்று சொல்லப்படாது எஞ்சும். நஞ்சென்று எங்கோ கரந்திருக்கும்

என் அறுபது வயதுக்குள் நன் கண்டதை வைத்தும் இதை உண்மை உண்மை என்ரே சொல்வேன். எவ்வளவு கச்சிதமாகச் சொல்கிறான். உரவுகளில் குருதியுறவு அறாது, ஆனால் அதையும் குருதி அறுக்கும் என்னும்போது பகீர் என்றது

சபரிநாதன்