Thursday, December 15, 2016

கற்பனை




"இவை மாகேந்திரம் எனப்படும் தொன்மையான வேதமரபைச் சேர்ந்த சடங்குகள்">

Indian History and Architecture தளத்தில் இன்று வெளியான சுவாரசியமான குறிப்பு: ஆய்வாளர் வரலாற்றாய்வாளர் டி என் ராமச்சந்திரன் அவர்களின் கருத்துப்படி மாமல்லபுரம் சிற்பங்கள் எழுந்ததில் முதலாம் மகேந்திரவர்மனுக்கு பெரிய பங்கு உண்டு. 

ஆறாம் நூற்றாண்டில் 'கிராதார்ஜுனியம்' காவியத்தை எழுதிய கவி பாரவியுடன் மகேந்திரவர்மன் மாமல்லபுரத்திற்கு வந்திருக்கவேண்டும் என்றும், அவரது காவியத்தை கேட்டு அதைக் கல்லில் வடித்ததே  புகழ்பெற்ற 'அர்ஜுனன் தபசு' புடைப்பு என்றும் ராமச்சந்திரன் கருதுகிறார்.

வரலாற்றாய்வாளர்கள் இதை இன்னும் முழுதாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் கற்பனை செய்தால் நன்றாக இருக்கிறது இல்லையா !  மாகவியும் மாமன்னனும் இணைந்து தங்கள் கற்பனையால் உருவாக்கியது ...

 
 
மதுசூதன் சம்பத்