Sunday, January 1, 2017

நான்காமாண்டு



ஜெ

இன்று நான்காமாண்டு தொடங்குகிறது வெண்முரசுக்கு. நான்கு ஆண்டுகள் ஒவ்வொருநாளும் ஓர் அத்தியாயம். ஒரு அத்தியாயம்கூட போகிறபோக்கில் எழுதப்படவில்லை. எண்ணித்தேர்ந்த சொற்கள். பலசமயம் ஒரு சொற்றொடரிலேயே நின்றுவிடுவேன் . வெண்முரசையே நினைத்து நினைத்து என் மொழியும் அதுவாகவே ஆகியிருக்கிறது.

இதுவரையிலான அத்தியாயங்களை எண்ணிப்பார்க்கையில் திகைப்பாக இருக்கிறது. சத்யவதி சின்னப்பெண்ணாக இருக்கும்போது வாசித்த கதை. இன்று அவள் கொள்ளுபேரன்கள் பெரியவர்களாக ஆகிவிட்டார்கள். எத்தனை எத்தனை கிளைக்கதைகள். எத்தனை துணைக்கதைகள். நினைக்க நினைக்க பிரமிப்பாக இருக்கிறது

வெண்முரசை இப்போது எவரும் மதிப்பிட முடியாது. இது எங்கே செல்கிறதென்றே எவருக்கும் தெரியாது. அந்தந்த அத்தியாயங்களை வாசித்துப்பிரமிப்பது மட்டும்தான் நம்மால் முடிவது. ஒட்டுமொத்தமாகத் தொகுத்துக்கொள்வதற்கு இன்னும் நெடுநாட்களாகுமென நினைக்கிறேன்

வாழ்த்துக்கள் ஜெ

சரவணன்

வியாசனின் பாதங்களில்http://www.jeyamohan.in/43681#.WGiIqXpppdg