Wednesday, January 18, 2017

தொடர்ச்சி


ஜெ

கிராதம் நாவலின் பல துணைக்கதைகளை ஒன்றுடன் ஒன்று இணைத்துக்கொண்டு ஒரு பெரியகதையாக ஆக்கிக்கொண்டேன். காளாமுகரின் வரலாறுகள் முதல் காலபீதியின் கதைவரை ஒரு தொடர்ச்சி இருக்கிறது. அதேபோல விருத்திரனின் கதைமுதல் ஊர்ணநாபனின் கதைவரை தொடர்ச்சி இருக்கிறது

காளாமுகர்கள் வந்துகொண்டே இருந்தார்கள் வெண்முரசில். ஒருவர் பாஞ்சாலியின் முடியேற்பு பகுதியில் வந்தார் [ பிரயாகை] அவர் தன்னைப்பலிகொடுக்கும் இடம் கொடூரமனாது. அதற்கு முன்பு அவர்கள் இளநாகன் பயணம்செய்யும்போது வந்தார்கள். இந்த அமைப்பே  ஒரு தொடர்ச்சியுடன் இருக்கிறது

சாரங்கன்