Monday, January 2, 2017

அனல்





ஜெமோ

மகாசூதராகிய உக்ரசிரவஸ் அரணிக்கட்டைமேலும் முழவின்மேலும் கொள்ளும் பற்று அற்புதமானது. அரணிக்கட்டையில் உளே வாழும் தீயை எழுப்ப அவர் முயல்கிறார். ஆனால் தோளில் வலிமை இல்லை. ஆனால் சொல் வழியாக அவ்வள்வுபெரிய தீயை எழுப்பிக்காட்டுகிறார். அந்த அரணிக்கட்டை என்ற உருவகத்தை வளர்த்துக்கொண்டே செல்கிறீர்கள். ஆனால் குழந்தையின் பிடிவாதமான விளையாட்டாகவும் அதை அமைத்திருக்கிறீர்கள். அரணிக்கட்டையில் உறங்கும் தீயை அடிமுடி இல்லாததாக மறுபடி காட்டும்போது ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது

மகேஷ்