Monday, February 20, 2017

இளையவன்

\
தர்மம் அர்த்தம் காமம் மூன்றும் புரூரவஸை பார்க்க வருகின்றன என்பதுதான் மகாபாரதம்கதை. அதில் அறத்தை மிக இளையவனாக ஆக்கியிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் என்ன இது என நினைத்தேன். ஆனால் உண்மையில் காமம்தானே முதலில் வந்தது. அதுதானே மூத்தது. அர்த்தம் அடுத்தபடியாக. அறம் இன்னும் மனம் உறுதிப்படாத சின்னப்பிள்ளைதானே? சரிதான் என்று நினைத்துக்கொண்டேன்

சித்ரா