Monday, February 27, 2017

இணை



ஜெ

மாமலர் மெல்லுணர்ச்சிகளின் நாவல். அதன் தலைப்பே அதைச் சொல்லிவிட்டது. ஆனால் அது காதல்போல மட்டும் அல்லாமல் பல தளங்களுக்குச் செல்கிறது. மூதரசி தன் கணவனின் இறந்த உடலை அணைத்துக்கொண்டு படுத்திருக்கும் காட்சி என் மனதை உருக்கிவிட்டது. அது ஒரு அமரத்துவம் வாய்ந்த உறவு என்று தோன்றியது. இந்த மெல்லிய ஆண்பெண் உணர்ச்சிகளில் அதுதான் உச்சம் என நினைக்கிறேன்.

அவர் முகம் மலர்ந்து தெய்வம்போல படுத்திருப்பதும் அவள் ஒடுங்கி சின்னப்பிள்ளைபோல அருகே கிடப்பதும் ஒரு பெரிய ஓவியம்போல மனதிலே நின்றன

சண்முகம்