Sunday, February 5, 2017

களியாட்டம்




ஜெ

மாமலரில் தருமன் கனிந்து ஒரு தந்தையாகவும் திரௌபதி கனிந்து ஓர் அன்னையாகவும் மாறியிருக்கிறார்கள். அடங்காத மகனாக பீமன். அடங்கிய பிள்ளைகளாக சகாதேவனும் நகுலனும். ஒரு இனிய குடும்பமாக இருக்கிறார்கள்.

இந்த அத்தியாயங்களில் குரங்குகளின் சேட்டைகளை கூர்மையாக எழுதியிருக்கிறீர்கள். குரங்குகளின் கூர்மையான கண்கள் ஆராய்ச்சி மனப்பான்மை அப்பாவித்தனம் உற்சாகம் எல்லாமே அருமையாக பதிவுசெய்யப்பட்டுள்ளன

அதிலும் குரங்குகள் அலையலையாக வீட்டுமேல் வந்து குதிப்பது எங்கள் வீட்டில் அன்றாடம் நிகழும் ஒரு விஷயம்

சண்முகநாதன்
தென்காசி