Friday, February 24, 2017

உயிர்த்தெழுதல்



ஜெ

புரூரவஸ் உயிர்த்தெழுந்தபின்னர் அடையும் மாற்றம் ஆச்சரியமூட்டியது. ஒருவகையில் அதிர்ச்சி அளித்தது. ஆனால் பின்னர் யோசித்தபோது முன்னரே அது கதையில் சொல்லப்பட்டுவிட்டது என்று தெரிந்தது. ஒரு சாபமாக இந்த ஸ்கீமா வந்துவிட்டது. இது மானுட இயல்பு. ஆனால் மகாபாரதத்திற்கு இதைச்சொல்ல இந்தவகையான ஒரு டெம்ப்ளேட் கைவந்துள்ளது.

எலாமே உச்சம்தான். புரூரவஸின் துக்கம், சாவு, உயிர்த்தெழுவது எல்லாமே. அவரைச்சுற்றி உருவாகி வந்திருக்கும் கதாபாத்திரங்களும் ஒரு தனிநாவலுக்குரிய கூர்மையான குணாதிசயங்களுடன் உள்ளனர். அயுஸ் மூதரர் மூதரசி எல்லாருமே தனித்தன்மை கொண்ட கதாபாத்திரங்களாக இயல்பகா உருவாகி வந்துள்ளனர். கிரியேட்டிவாக வரும்போதுள்ள ஒரு சரியான ஒழுங்கு உள்ளது

சண்முகம்