Monday, February 27, 2017

மீட்சி



ஜெ

மானுட மனோவியல் பற்றி அடிக்கடி அதிர்ச்சிதரத்தக்க நுட்பமான இடங்கள் வெண்முரசில் வந்துகொண்டிருக்கும். அதிலும் ஆண்பெண் உறவு பற்றி பல பகுதிகள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமான இடம் என்பது இன்று வந்துள்ளது

முதிய பெண்மணி தன் கணவனின் மரணப்படுக்கையில் உடன்படுக்கிறாள். அப்போது அவள் தன் இளமைப்பருவத்தைத்தான் நினைக்கிறாள். அவளுக்கு அவளுடைய கணவன் ஒரு பொருட்டாகவே தென்படவில்லை. எந்தப்பெண்ணுக்கும் கணவன் ஒரு பொருட்டு அல்ல என்று ஒரு கண்டடைதல் அங்கே வருகிறது

அவளுக்கு பிள்ளைதான் முக்கியம். அவனை மானசீகமாக இழந்தபொன் நேராக அவள் இளமைக்கே சென்றுவிடுகிறாள்.

சாரங்கன்