Tuesday, April 25, 2017

மாற்றம்






 ஜெ
ஒரு பெருக்கெடுப்பு போல சென்றுகொண்டிருக்கும் மாமலரில் பல பகுதிகள் கவனிக்கப்படாமலேயே போய்விடும் என நினைக்கிறேன். நான் கவனித்த ஒன்று. தேவயானி சேடியர் முன் சாதாரணமாக நிர்வாணமாக நிற்கும் அரசி. தன் உடல் பற்றிய பெருமிதன். அரசி என்கிற மிதப்பு. ஒளிக்க ஏதுமில்லை என்ற எண்ணம்

ஆனால் சரபஞ்சரம் வந்ததும் உடைமாற்றிக்கொள்ளவேண்டும், வெளியே போ என்று சொல்கிறாள். அந்த மாற்றம்தான் அத்தனை நீளமான அத்தியாயத்தின் சாரம் என நினைக்கிறேன்

சாரங்கன்