Thursday, April 13, 2017

கல்பம்





அன்பு ஜெமோ சார்,
         
 

ஜெ

கல்பம் வெண்முரசில் இயல்பாக காணக் கிடைப்பது.இப்போது
                "சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள்."என்ற ஒற்றை வரையறை
                    சத்யவதி -சியாமை, குந்தி-அனகை, திரௌபதி - மாயை, தேவயானி -சாயை எண்ணி எண்ணி சிதறி பரவிக் கிடந்த அனைத்தும் திரண்டு, ஒரு வடிவம் கொண்டது சார்.
இரா.சிவமீனாட்சிசெல்லையா

அன்புள்ள செல்லையா

மனிதர்கள் அழிவதில்லை- தலைமுறைகள் வழியாக மீண்டும் மீண்டும் நிகழ்கிறார்கள் என்பது மகாபாரதத்தின் தரிசனங்களில் ஒன்று

ஜெ