Wednesday, June 28, 2017

வெண்முரசு கூடுகை




பிாிய நண்பா்களுக்கு,
 
                                      இந்த மாதம் வெண்முரசு (சென்னை) கூடுகையில் முதல் முறையாக கலந்துக்கொண்டது மிக்க மகிழ்ச்சியையும்,நிறைவையும் அளித்துள்ளது.  சொல்புதிது குழுமத்தில் மட்டுமே அறிந்தவா்களை நோில் சந்தித்தது மகிழ்ச்சியுட்டுவதாக இருந்தது.  நாம் படித்த விருப்பமான புத்தகங்களை பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் சாியான நபா்கள் அமைவது, மணவாழ்வின் துணை அமைவதற்கு சமம்.  ஏனென்றால் சாியாக அமையாவிட்டால் மேற்கொண்டு நாம் அதில் பயணம் செய்ய இயலாமல் போய்விடும்.  மாமலரின் போக்கும் சாரமும் அதன் மையமான பீமனின் தேடலும் மெய்மையும் விரிவாகவே பேசப்பட்டது.  இன்னும் மாமலரை வாசிக்காத எனக்கு ஆா்வத்தையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது.  பொதுவாகவே கதைகளை பற்றி பேசுவதற்கு ஆா்வமாகவே இருந்துள்ளேன். ஆனால் அது மிக நெருங்கியவா்களுடன் மட்டுமே. மற்றவர்களிடம் பேசுவதற்கு சொற்கள் கூடாது. ஏனென்றால் கதைகள் அந்தரங்கமானவை என்று எண்ணுபவள் நான். கதையின் மையம் என்றும் ஓன்றுதான், ஆனால் வாசிப்பவனின் மனம் அதில் தனக்கான ஓன்றை அடையும் அது அவனை வெகு ஆழத்திற்கு இட்டு செல்லும்.  முதல்முறையாக ஒரு கதையை வாசிக்கமாலேயே அதைபற்றிய ஒரு உரையாடல் வழியாக நான் எனக்கானவற்றை அடைந்துள்ளதாக உணா்கிறேன். உரையாடிய அனைவா்க்கும், அன்புடன் திண்பண்டங்களை பகிா்ந்து பாிமாறி, செவிக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் ஈய்த அன்பு உள்ளங்களுக்கும் மிக்க பிாியமுடன் கூடிய நன்றிகள்.  அடுத்த வெண்முரசு கூடுகைக்காக இப்போது இருந்தே ஆவலுடன் காத்திருக்கிறன்... நன்றி.

தேவி. க
ஆவடி.