Thursday, August 31, 2017

விண்ணிலாடுவதும் மண்ணிலாடுவதும்





நீரிலாடும் கோலங்கள் நீ.
விண்ணிலாடுவதும் மண்ணிலாடுவதும்
சொல்லிலாடுவதும் பொருளில் நின்றாடுவதும்
பிறிதொன்றல்ல.

என்ற வரியை மீண்டும் வாசித்து நீர்க்கோலத்தை முடித்தேன். ஒரு கனவுபோன்ற அனுபவம். ஒவ்வொன்றும் உருமாறிக்கொண்டே இருக்கின்றன. தமயந்தி இளம்பெண்ணாக இருந்து முதுமகளாகி திரும்பி வருகிறாள். அவள் இளமையும் அழகும் எல்லாம் உடல். உள்ளே அவள் என்றைக்கும் முதுமகள். ஆகவே உடல் உருகியதும் முதுமகள் வெளியே வருகிறாள். நளன் உள்ளே விளையாட்டுப்பையன். அந்த முரண்பாடும் அழகாக இருந்தது.

நீர்க்கோலம் வெண்முரசுநாவல்களிலேயே வித்தியாசமானது. இந்த கட்டமைப்பு ஒன்றிலிருந்து ஒன்று என்று கதை சுழன்றுகொண்டே இருந்தது. இப்படி இரு கதைகளிலும் இருக்கும் பொதுவான கூறுகளைக் கண்டுபிடித்து அவற்றைச் சரியாகப் பொருத்த இருகதைகளையும் எந்த அளவுக்குக் கூர்மையாக வாசித்திருக்கவேண்டும் என வியந்தேன்

சாரங்கன்