Tuesday, August 29, 2017

கலி விலகும் கணம்



அன்புள்ள ஜெ

கலி விலகும் கணம் மிக முக்கியமானது. எதுவுமே தேவையற்றவனாக வெறுமே இருப்பவனாக ஆகிவிடுகிறான். ஞானமோ முக்தியோ கூட வேண்டாம். அதன்பின்புதான் காளைவடிவ கலி விட்டுவிட்டுச் செல்கிறது. அது புஷ்கரனை காளைவடிவத்தில் வந்து பிடித்த அந்தக்காட்சியிலிருந்து ஆரம்பித்தால் ஒரு சீரான கதை இதில் உள்ளது. கலியை அடையாளம் கண்டு அதைக் கொன்றபின் இன்னும் ஆழத்திற்குச் சென்று இறுதியில் மீண்டு வருகிறான் எல்லாவற்றையும் கைவிட்டபிறகுதான் மீட்பு

புஷ்கரன் ஒரு அபாரமான கதாபாத்திரம். சந்தேகமே இல்லை. ஜராசந்தனுக்கும் இவனுக்குமான ஒப்புமை முக்கியமானது அவன் ஏன் மீளவில்லை என்றால் அவனுக்கு ஸ்பிளிட் பெர்சனாலிட்டி. இவன் முழுதாக அமிழ்ந்து முழுதாக மீள்கிறான்

செல்வராஜ்