Friday, September 22, 2017

அணிபரத்தையர், கடவல்லூர்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்.

1) வெண்முரசில் அணிபரத்தையர் வரவேற்பதற்கு வருகிறார்கள். இவர்களை ஏன் அழைத்தார்கள் என சிந்தித்ததுண்டு. கம்பனும் காமமும்-6 [http://www.jeyamohan.in/1702] படித்தபின் அது ஏன் என்று புரிந்தது.

2) கடவல்லூர் அன்யோன்யம் [http://www.jeyamohan.in/919] படித்தேன். சொல்வளர்க்காடில் வரும் வேத பாடசாலைகளும் விவாதங்களும் நினைவுக்கு வந்தது.

3) உலகின் நீளமான நாவல் வரிசையில் வெண்முரசு முதலிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது [https://en.wikipedia.org/wiki/List_of_longest_novels]. சாதனையாக (கின்னஸ், லிம்கா) பதிவு செய்யலாமே. "கி.ரா"வுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என சொல்லி இருந்தீர்கள். நாம் செய்யும் சாதனைகளை பதிவு செய்தால், இந்திய அளவில் தெரிந்தால் தானே அங்கீகாரம் கிடைக்கும்.  

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை