Friday, November 17, 2017

மற்போர் கலை



அன்பின் ஜெ,

கிருஷ்ணையின் பொருட்டு படகில் நடந்த மற்போரில் விருஷசேனனிடம் சர்வதன்
தோற்றுபோனான் என்ற செய்தியை  ஜீரணிக்க இயலாமல் கவலையுற்றிருந்தேன். 

{
“மானுடரின் பொதுவான கைகால் நீளம் இவ்வளவுதான் இருக்குமென்று வகுத்து மற்போர் கலை அமைந்துள்ளது. அக்கலை வகுக்காத உயரமும் நீளமும் உடையவர்கள் மண்ணில் பிறக்கையில் இப்படித்தான் ஆகிறது”.
}

இவ்வரிகளினூடாய் சற்றே சமாதானமடைந்தேன்.

பீமசேனன் வசுஷேணனிடம் தோள்கோத்து தோற்கும் சூழல் வந்தாலும்
 "மூத்தவனிடம் தானே தோற்றான்" என்பதை தாண்டி என்னை 
ஆசுவாசப்படுத்திக்கொள்ள
இதுவும் ஒரு  காரணமாக இருக்கும்.


- யோகேஸ்வரன் ராமநாதன்.