Sunday, November 19, 2017

மாமலர் வருகை





ஜெமோ,
                   ஒரு நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு மாமலர், குழந்தைகள் தினத்திற்கு அடுத்த நாள் கையில் கிடைத்தது. 

கிழக்குப் பதிப்பகத்தார், பீமன் எனும் குழந்தையை  இத்தினத்தில் கிடைக்கச் செய்தது ஏதோ குறிப்பணர்த்துவது போலத் தோன்றியது.

இந்த அடுமனையாளனின் பெருங்காதலில் கரைய ஆரம்பித்திருக்கிறேன்.

அன்புடன்
முத்து

குறிப்பு: 

இதே நாளில் என்னுடைய இரு கடிதங்களும் உங்களுடைய இணையதளத்தில் பிரசுரிக்கப்பட்டது எனக்கு மேலும் உவகையளித்து காற்றில் மிதக்கச் செய்தது. அதை சிலாகித்து என்னுடைய தளத்திலும் ஒரு பதிவை எழுதியுள்ளேன். அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.


முத்து