Monday, November 20, 2017

அறம்



ஜெ

வெண்முரசில் மக்களுக்கும் அரசனுக்கும் இடையே இருக்கும் உறவைப்பற்றி இன்றைய அத்தியாயம் மீண்டும் எண்ண வைத்தது. ஆரம்பத்திலேயே துரியோதனனை மக்களுக்கு பிடிக்காமலாகிவிட்டது. ஆகவே வெறுக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன என்று சொல்லமுடியது. அதேபோல யுதிஷ்டிரனை விரும்புகிறார்கள்.

அறத்தாறிதுவென வேண்டாம் சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை

என்ற திருக்குறளை நினைத்துக்கொண்டேன். அதற்குஎன்ன காரணம் சொன்னாலும்  எனக்குத்தோன்றுவது இதுதான். அரசனுக்கும் மக்களுக்குமான உறவில் அறம் என்ன என்று சொல்லவே முடியாது


ராஜசேகர்