Wednesday, November 15, 2017

சாம்பனின் குணம்


அன்புள்ள ஜெ

கிருஷ்ணையை சாம்பன் திருமணம் செய்துகொண்டான் என்னும் செய்தியே ஆச்சரியமானது. இதெல்லாம் வழக்கமான புராணகதைகளில் இல்லாதது. ஜாம்பவர்களில் ஒருவன். அவன் ஷத்ரியகுடியில் பிறந்தவளை திருமணம் செய்துகொள்கிறான். இந்தவகையான ஏராளமான ஊடுபாவுகள் வழியாகத்தான் மகாபாரதக்கதை செல்கிறது. இந்த சாம்பனால்தான் யாதவக்குலமே அழிந்தது என்ற செய்தியை நினைவுபடுத்திக்கொள்கையில் திகைப்பாகத்தான் இருக்கிறது. அந்த அழிவைச்செய்யக்கூடியவனாகவே சாம்பன் இந்த நாவலில் வந்துகொண்டிருக்கிறான். அதை செய்யவைப்பவன் காளிதியின் மகன் என்பதும் தெரிகிறது

மகாதேவன்