Tuesday, November 14, 2017

யௌதேயனின் உத்தி



அன்புள்ள ஜெ

யௌதேயன் முன்வைக்கும் ஒவ்வொரு உத்தியும் பிரமிக்கச்செய்கிறது. அப்படியென்றால் பெண்ணைக்கொடுக்கவேண்டியதுதானே, அதுதானே சரியான வாக்குறுதி என்ற கேள்வியும் சரி, அந்த உத்தி முறியடிக்கப்பட்டபோது அவன் எடுத்துக்கொள்ளும் அடுத்த தந்திரமும் சரி மிகக்கூர்மையானவை. இந்த அம்சம் யுதிஷ்டிரனுக்குள் இருப்பதாக முன்பு காட்டப்படவில்லை. ஆனால் விராடபர்வத்தில் குங்கர் அப்படித்தான் இருக்கிறார். அந்த அம்சமே யௌதேயனாகப்பிறந்துள்ளது என நினைக்கிறேன். அதை சர்வதன் நன்குணர்ந்திருக்கிறான். இந்தத்திறமையெல்லாம் கணிகர் முன் ஒன்றுமே அல்ல என்றும் சர்வதனுக்குத்தான் தெரிந்திருக்கிறது


செல்வராஜ்