Tuesday, December 26, 2017

காட்சிகள்





இப்போது வந்துகொண்டிருக்கும் அத்தியயாங்களில் நுட்பமான உணர்வுகள் பேசப்படுகின்றன. ஆனால் அவையனைத்தையும் விட முக்கியமானதாக எனக்குப்படுவது வெறும்காட்சிகள். அத்தனை மருமகள்களும் சூழ இருக்கும் பெருந்தாய்போன்ற காந்தாரியின் காட்சி பதற வைக்கிறது. மைந்தர்கள் இறக்கக்கூடும் என்ற உள்ளுணர்வு அவளுக்கு இருக்கிறது. ஆனால் அவள் அன்றாடத்தால் அதை மூடிக்கொள்கிறாள். ஒருவகை மொண்ணைத்தனம் இது. ஆனால் இப்படி ஏதேனும் இல்லாமல் நம்மால் பெரிய விஷயங்களை எதிர்கொண்டு அன்றாடவாழ்க்கையை நடத்திச்செல்லமுடியாது


மாதவ்